சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை கூறி உள்ள நிலையில், இந்த திமுக அரசு தொடருவதற்கு தார்மிக உரிமை கிடையாது என்றும், பட்ஜெட் தாக்கல் செய்ய அருகதை கிடையாது என்றும் கூறி பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். இதை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டமன்ற வளாகத்தில் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வானதி சீனிவாசன் கருப்பு உடை அணிந்து வந்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.