நாமக்கல்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜகூ முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என்பதில் குழப்பமில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மறைந்த மூத்த தலைவர் ஆடிட்டர் ரமேஷின் 12-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை பேசும்போது, “ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாரணையை அமித்ஷா உள்ளிட்டோர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். விரைவில் நீதி கிடைக்கும்” என்றார்.