சென்னை: “வரும் தேர்தல் மிகக் கடினமாக இருக்கும் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுகவை எதிர்ப்பவர்கள் கூட்டணி வடிவத்தையே இன்னும் பெறவில்லை. திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறிக் கிடக்கின்றன” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: "தமிழுக்காக, தமிழர் நலனுக்காக குரல் கொடுக்கும் பார்வை கொண்டவர் கமல்ஹாசன். தேசிய அளவில் ஜனநாயக சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும்.