திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தண்ணீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருச்சி மாவட்டம் மண்ணச்சல்லூர் அருகே வெங்கக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தமது வீட்டிற்கு அருகே புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்து அதற்காக பணியாட்களை வரவழைத்து பணியை தொடங்கியுள்ளார். சுமார் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய போது சிலைகள் தென்பட்டது.
அடுத்தடுத்து 3 சிலைகள் தென்பட்டதால் உடனே அதுகுறித்து போலீசாருக்கு சுரேஷ் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மண்ணச்சல்லூர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் அங்கு விரைந்தனர். சிலைகளை ஆய்வு செய்தபோது அவைகள் ஐம்பொன்னால் ஆனா பெருமாள், ஸ்ரீதேவி, மூதேவி சிலை என்பது தெரிய வந்தது. மேலும், இவற்றின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட சிலைகளை வருவாய் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பூமிக்கு அடியில் ஐம்பொன் சிலை மீட்கப்பட்டதால் சுற்றுவட்ட கிராம மக்கள் வெங்கக்குடி கிராமத்தில் குவிந்து வருகின்றனர்.
The post திருச்சி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு: ரூ.50 கோடி மதிப்புடைய சிலைகளை கைப்பற்றி தொல்லியல் துறை ஆய்வு appeared first on Dinakaran.