திருச்சி: திருச்சியில் வீடுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்வதற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சுமார் 25 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
அத்துடன் நுகர்வோரிடம், சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், பூமிக்கடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.