சென்னை : திருத்தணி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டடத்திற்கு ‘பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி’ என பெயர் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் 97 கடைகளுடன் புதிய மார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய மார்க்கெட் கட்டடத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன.
The post திருத்தணி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டடத்திற்கு ‘பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி’ என பெயர் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.