தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக திருநெல்வேலிக்கு நாளை வருகிறார். அவர் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், டாடா சோலார் தொழிற்சாலையை திறந்துவைக்கிறார்.
பல்வேறு மாவட்டங்களில் களஆய்வுப் பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மொத்தம் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, கங்கைகொண்டானில் ரூ.4,400 கோடியில் கட்டப்பட்டுள்ள டாடா சோலார் தொழிற்சாலையை நாளை பிற்பகல் திறந்து வைக்கிறார்.