மதுரை: திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் விநியேகம் செய்யப்பட்ட விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனம் நெய், பால் பவுடர் தவிர்த்து பிற பால் பொருட்கள் தயாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திண்டுக்கல் ஏ.ஆர்.டைரி நிறுவனம் சார்பில் ஆர்.ராஜதர்ஷினி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எங்கள் நிறுவனம் 1995 முதல் நெய், வெண்ணெய் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்து வருகிறோம். திருப்பதி தேவஸ்தானத்தில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் கடந்தாண்டு மார்ச் மாதம் எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. வேறு நான்கு நிறுவனங்களும் திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்து வந்தது.