கேங்ஸ்டரான ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித்குமார்), திருந்தி வந்தால் மட்டுமே தன் குழந்தையைத் தொட வேண்டும் என்று தடை விதிக்கிறார் மனைவி ரம்யா (த்ரிஷா). இதனால் தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு சிறைக்குச் செல்லும் ஏகே, 18 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி ஆவலோடு தன் மகனை பார்க்க வருகிறார். ஆனால், அவருடைய மகன் குற்றத்தில் சிக்கி சிறைக்குச் செல்கிறார். தன்னுடைய பழைய எதிரிகளின் வேலை இது என்று களமிறங்கும் ஏகே-வுக்கு, ஓர் உண்மை தெரிய வருகிறது. பின்னர் தன் மகனை சிறையில் சிக்க வைத்தவர்களை வீழ்த்தினாரா, தன் மகனை வெளியே கொண்டு வந்தாரா, மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பது படத்தின் கதை.
ஒரு வரியில் நிமிர்ந்து உட்கார வைக்கும் கதைதான் இது. ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கையில் குடும்ப சென்டிமென்டை குழைத்து படமாகக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.