கோவை: “தீபாவளி தினத்தன்று ரூ.890 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்துள்ளதே திமுக அரசின் சாதனை” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கோவை வருகை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். டெல்டா மாவட்டத்துக்கு சொந்தக்காரர் என பெருமையாக கூறிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டத்துக்கு என எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.