சென்னை: ''தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டின் எல்லையை வலுப்படுத்த வேண்டும்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதியில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 26-க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்கின்ற பேரதிர்ச்சியான செய்தி அனைவரின் மனதையும் வேதனை அடைய செய்திருக்கிறது.