பெஷாவர்: பாகிஸ்தானில் பெஷாவரில் இருந்து குவெட்டா நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. பலுசிஸ்தான் மாகாணத்திற்கும், சிந்து மாகாணத்திற்கும் எல்லை பகுதியான ஐகோபாபாத் பகுதியில் ரயில் சென்று கொண்டு இருந்த போது தண்டவாள பகுதியில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. 3 அடி அளவில் தண்டவாளத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. 6 அடி நீள தண்டவாளம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் யாரும் பலியாகவில்லை. தண்டவாளம் சேதம் அடைந்ததால் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிந்து மாகாணத்தில் செயல்படும் ஜெய் சிந்து குவாமி மஹாஸ் அல்லது பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் (பிஎல்ஏ) இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
The post தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம் பாக்.கில் ரயில் குண்டு வைத்து தகர்ப்பு appeared first on Dinakaran.