சென்னை: அரசியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தும் நோக்கில் எனக்கு எதிராக 53 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்பதால் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சார்பில் வழக்கறிஞர் எஸ்.ரூபன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசியதாக எனக்கு எதிராக தமிழகம் முழுவதும் 53 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.