தூத்துக்குடி: தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் மாநகராட்சி சாக்கடை கழிவுநீர் உப்பளங்களில் தேங்கி உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உப்பின் தரம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் மிக பழமையான காளவாசல் உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 192 உறுப்பினர்கள் உப்பளங்களை அமைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து இந்த உப்பளங்களை அவர்கள் அமைத்துள்ளனர். இந்த நிலத்துக்கு உப்பு உற்பத்தியாளர்கள் தவறாமல் வரி மற்றும் குத்தகை செலுத்தி வருகின்றனர்.