தூத்துக்குடி: தூத்துக்குடி கீழூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த நவ.29ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் ரூ.1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சார்பதிவாளர் ஆரோக்கியராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாலை தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.3,63,000 பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம் மற்றும் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக உதவி பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் ஏரல் சார்பதிவாளர் (பொறுப்பு) செல்வக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
The post தூத்துக்குடியில் ரூ.3.63 லட்சம் பறிமுதல் விவகாரம்; மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.