நாகர்னூல்: ஸ்ரீசைலம் இடதுகரைக் கால்வாய் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 8 பணியாளர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உள்ளே சிக்கியிருப்பவர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்ல தடையாக இருக்கும் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் துளைபோடும் இயந்திரங்கள் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாகர்னூல் காவல் கண்காணிப்பாளர் வைபவ் கெய்க்வாட் கூறுகையில், “கேஸ் கட்டிங் இயந்திரம் ஏற்கனவே சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டுவிட்டது. இரவில் அவர்கள் துளையிடும் பணிகளை மேற்கொண்டனர். நேற்றிரவே பணிகள் தொடங்கி விட்டன. உள்ளே சிக்கியிருப்பவர்களை இன்று சென்றடைய முடியுமா என்று நான் கூற முடியாது.” என்றார்.