வண்டலூர் அருகே மாம்பாக்கம் ஊராட்சியில் ரூ.28.30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட திரவக் கழிவு மேலாண்மை திட்டம் முறையாக பராமரிக்கப்படாததால் செயல்பாடின்றி முடங்கியுள்ளது. திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கும் வகையில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 2021-22-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானியத்துடன் ரூ.28.30 லட்சம் மதிப்பில் திரவக் கழிவு மேலாண்மை திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
முதற்கட்டமாக 4 மற்றும் 6-வது வார்டில் உள்ள 250 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஒரு நாளைக்கு 30 ஆயிரம் லிட்டர் வரை மறுசுழற்சி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.