சென்னை: கவுரிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் திறன் வளர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் வாசுதேவன் தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், முதல்வர் கல்பனா, துணை முதல்வர் ஜானகி, கல்லூரியின் பெண்கள் திறன் வளர் மேம்பாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.