சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் மேற்கு வங்கம் – சத்தீஸ்கர் அணிகள் மோதின.
இதில் மேற்கு வங்க அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.