கோவை: தேசிய ஜவுளித் தொழில் வளர்ச்சியில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது என, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி குறித்து தொழில்முனைவோருக்கான ஐந்து நாட்கள் பயிற்சி முகாம், கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிட்ரா) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜவுளித் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.