சென்னை: “நான் தனித்துதான் போட்டியிடுவேன். நான் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை. என்னுடைய பயணம் என் கால்களை நம்பித்தான். அடுத்தவர்களுடைய கால்களையோ, தோள்களையோ நம்பி எங்களுடைய லட்சியப் பயணம் இல்லை” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்.14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நாதகவும் பாஜக கூட்டணிக்குச் செல்லும் எனக் கூறப்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.