புதுடெல்லி: மக்களவை தொகுதி மறுவரையறை என்பது வேறு; மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது வேறு என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். புதன்கிழமை அன்று இதனை அவர் தெரிவித்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.