திருத்தணி: திருத்தணி அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விரைவு ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.
அரக்கோணம் சந்திப்பிலிருந்து ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை காலை 6:40 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் 7.10 மணி அளவில் திருத்தணி அருகே சென்றபோது திடீரென இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியிலேயே நின்றது.