நடப்பு ஐபிஎல் சீசனை முன்னிட்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் தோனி வீரர்கள் தேர்வில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை என்று கூறும் சுரேஷ் ரெய்னா, அவர் ஈடுபாடு காட்டியிருந்தால் ஏலத்தில் வீரர்கள் தேர்வில் தவறுகள் நடந்திருக்காது என்றார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடக நிறுவனத்துக்கு இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியது: “எம்.எஸ்.தோனிதான் இறுதி முடிவை எடுப்பார் என்று அவர்கள் எப்போதும் கூறுவார்கள். ஆனால், நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் எந்த ஏலத்திலும் நேரடியாகப் பங்கேற்றதில்லை. அந்த விவாதங்களிலும் நான் கலந்து கொண்டதில்லை. தக்கவைத்த வீரர்கள் பற்றியே நான் பேசியிருக்கிறேன். ஒரு வீரரை ஏலம் எடுக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க தோனிக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், எனக்குத் தெரிந்து தோனி அவ்வளவாக இதில் ஈடுபாடு காட்டவில்லை என்றே தோன்றுகிறது.