பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார்.
நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
ஜேக்கப் பெத்தேல் 55, விராட் கோலி 62, தேவ்தத் படிக்கல் 17, கேப்டன் ரஜத் பட்டிதார் 11, ஜிதேஷ் சர்மா 7 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் களம்புகுந்த ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 53 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.