ஸ்காட்லாந்தில் உள்ள டுண்டீ நகரத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை லீக் ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்காட்லாந்தை மீண்டுமொரு முறை அச்சுறுத்தியது நேபாள் அணி. ஸ்காட்லாந்தின் 323 ரன்கள் இலக்கை விரட்டிய நேபாளம் 321 வரை போராடி வந்து 2 ரன்களில் தோல்வி கண்டது.
இதற்கு முந்தைய போட்டியில்தான் ஸ்காட்லாந்தின் 297 ரன்கள் இலக்கை வெற்ற்கரமாக சேஸிங் செய்து சாதித்தது நேபாளம். நேற்று 323 ரன்களை எடுத்தும் ஸ்காட்லாந்தினால் இலக்கைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம் என்ற நிலைமைக்கு நேபாள் ஆளாக்கியது.