மதுரை: “நகைக் கடன் கட்டுப்பாடு விவகாரத்தில் மக்களின் ஆலோசனைகளும் பரிசீலித்து இறுதி செய்யப்படும்” என சு. வெங்கடேசன் எம்.பி எழுதிய கடித்தத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “புதிய நகைக் கடன் ‘நகல்’ விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28-ல் கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு ஜூன் 4, 2025 அன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார்.