சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை 30 வாகனங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்க அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானங்கள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.