சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களை கூறி, ஆட்சிக்கு வந்தபின், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியது திமுக.
காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலை தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாதது ஆச்சரியம்.