பக்சர்: ‘‘நாற்காலிக்காக கட்சி மாறுபவர் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்’’ என பக்சரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிஹாரின் பக்சர் பகுதியில் அரசியல்சாசன பாதுகாப்பு கருத்தரங்கு என்ற பெயரில் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.