ஒவ்வொரு திட்டத்திலும் உரிய நிதியை ஒதுக்காமல் அரசியல் பார்வையுடன் தமிழகத்தை மத்திய அரசு ஓரங்கட்ட நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: மக்கள் நம்பிக்கையுடன் வழங்கிய ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருந்தாலும், நாளொரு போராட்டத்தை முன்னெடுத்தே நம் உரிமைகளைப் பெறக்கூடிய வகையில் மத்திய அரசு தமிழகத்தை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.