அண்மையில் ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ-வும் திமுக எம்பி-யும் ‘முட்டாப் பயலே’ வசனம் பேசி மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணையே இன்னும் முடியாத நிலையில், மயிலாடுதுறை மாவட்ட திமுக-விலும் அப்படியொரு கலகம் வெடித்துள்ளது.
ஜூலையில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக சிலர் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஒருவழியாக அதைச் சமாளித்து இருதரப்பையும் சாந்தப்படுத்தினார் நேரு. இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி நடந்த கூட்டத்திலும் ரத்தக் களறி ஆகுமளவுக்கு மீண்டும் மோதல் வெடித்தது.