சென்னை: “பாஜக உடன் கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக, நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்ற கண்டிஷனைப் போட்டு தொடர அருகதை இருக்கிறதா?” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
பேரவையில் இன்று (ஏப்.21) பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை அனுமதித்ததால்தான் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது, என்று பேசினார். அமைச்சர் சிவசங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர், பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே, திமுகதான் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.