சாதகமாற்ற சர்வதேச நிலவரங்களால் பங்குச் சந்தையில் நீடித்து வந்த சரிவுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்செக்ஸ் 740 புள்ளிகள் அதிகரித்து 73,730 ஆகவும், நிப்டி 254 புள்ளிகள் உயர்ந்து 22,337-ஆகவும் நிலைத்தன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக கொள்கை சர்வதேச வணிகத்தில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலும் ஆசிய சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.