நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த ஹெலின் ரோனிகா ஜேசுபெல், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். இந்தப் பள்ளியில் ஏற்கெனவே பணியாற்றிய ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், காலியாக இருந்த பணியிடத்தில் நான் நியமிக்கப்பட்டேன்.