நெல்லை : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.4,400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.4,400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். பின்னர் டிபி சோலார் நிறுவன வளாகத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து புதியதாக ரூ.3,125 கோடி முதலீட்டில் கட்டப்படவுள்ள விக்ரம் சோலார் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டினார்.