நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சுதந்திர போராட்ட காலத்தில் நிறுவப்பட்டது. காலப்போக்கில், இதை நடத்தி வந்த நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அந்த நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் ரூ.90 கோடி கடன் வாங்கியது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அந்நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
யங் இந்தியன் நிறுவனத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் தலா 38 சதவீத பங்குகள் வைத்துள்ளனர். மீதி பங்குகளும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பெயரில் உள்ளன. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.