இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நம்பிக்கையளிக்கும் வகையில் தொடங்கி உள்ளது. நாடு விடுதலையடைந்து 100-வது ஆண்டை கொண்டாடும் 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக திகழ வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு என்றும், வளர்ந்த இந்தியாவில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி பேசியிருப்பது இளைய சமுதாயத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தனது உரையில், ‘‘நாட்டில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்’’ என்ற நல்ல செய்தியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொடங்கி வைத்துள்ளார். இதே உற்சாகத்துடன் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப் போகின்றன என்ற எதிர்பார்ப்புடன் நாட்டு மக்கள் ஆவலுடன் உள்ளனர்.