சென்னை: தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாக தொடர்ந்து கண்காணித்து விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.