
சென்னை: “மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம். நான் என் கணவர் ரங்கராஜ் உடன் உறுதியாக நிற்கின்றேன். அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்” என்று ஸ்ருதி ரங்கராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இடையே நீடித்து வரும் குடும்பப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம் பணம் பறிப்பதும், குடும்பத்தை நாசமாக்குவதும் தான்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

