சென்னை: பங்குனி மாதத்தின் மங்களகரமான நாளான இன்று சார்-பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்படும். ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும். 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும். அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடக்கும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும். ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post பத்திரப்பதிவு – இன்று கூடுதல் டோக்கன்கள் appeared first on Dinakaran.