சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான தி.நகர் பனகல் பூங்கா – கோடம்பாக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘பெலிகன்’,ஜூன் மாதத்தில் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகே பணியை முடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.