ஆவடியில் ரூ.28 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா, போதிய பராமரிப்பின்றி பாழாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு பகுதியில் 87 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரி ஆவடி பகுதியின் முக்கிய நீராதாரமாக இருந்து வந்தது. நாளடைவில் இந்த ஏரியின் ஒரு பகுதி வீட்டுவசதி வாரிய குடியிருப்பாக மாற்றப்பட்டது. எஞ்சியுள்ள ஏரியின் ஒரு பகுதியில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வீடு, உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இங்கு வந்து கலக்கிறது.