திருவண்ணாமலை: சென்னையில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற குழுவினர் பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது, மழை வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனர் மற்றும் பிரம்மாம்பிகை கோயில் 4,560 அடி உயரமுள்ள பருவத மலையில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திருவேற்காடு பகுதியிலிருந்து 15 பேர் வாகனத்தில் வந்துள்ளனர்.
இவர்கள், மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை கீழே இறங்கி வந்துள்ளனர். ஓடையை கடக்க முயற்சி இந்நிலையில், அன்றைய தினம் பெய்த கனமழையினால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓடையில் மழைவெள்ளம் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.