பழம்பெரும் நடிகையும், நடிகர் ஏவி.எம் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
தமிழ் சினிமாவில் 1960, 1970 மற்றும் 80 களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் புஷ்பலதா. 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, போலீஸ்காரன் மகள், பார் மகளே பார், ஆலயமணி, வானம்பாடி, ஆண்டவன் கட்டளை, ராஜபார்ட் ரங்கதுரை, ஆயிரம் ஜென்மங்கள், கல்யாண ராமன் என பல படங்களில் நடித்துள்ளார்.