பவதாரிணி இந்த உலகை விட்டு செல்வதற்கு முன் என்னுடன் கழித்த நாட்களை மறக்க முடியாதது என்று இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஜலீல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங், இளவரசு, ராதாரவி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தினை ஈசன் இயக்கியுள்ளார். மறைந்த இசையமைப்பாளர் பவதாரிணி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பில் உருவான கடைசி படமும் இது.