சென்னை: கிரிக்கெட் விளையாட்டில் பவுண்டரி லைனை ஒட்டி நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பது சார்ந்து ஏற்கெனவே உள்ள விதியை திருத்தம் செய்து புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி). அது குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 2023 பிக் பேஷ் லீக் கிரிக்கெட் சீசனில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் நெசர், பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச்சினை ரெபரான்ஸாக எடுத்துள்ளது ஐசிசி. அதாவது பந்தை கேட்ச் செய்ய இரண்டு முறை பவுண்டரி லைனுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று, பந்தை பிளேவில் வைத்திருந்தார் நெசர். இது தற்போது உள்ள விதி எண் 19.5.2 படி செல்லும். ஆனால், எம்சிசி கொண்டுவந்துள்ள புதிய விதி காரணமாக இனி இது செல்லாது. விரைவில் இந்த விதி அமலுக்கு வர உள்ளது.