செங்கல்பட்டு: “பாஜக-அதிமுக கூட்டணியைப் பற்றி நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக்கொள்வார்கள். எனவே, முகநூலிலும், எக்ஸ் தளத்திலும் யாரும் கூட்டணி குறித்து கருத்துச் சொல்ல வேண்டாம்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று (ஏப்.18) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் கட்சியின் பொறுப்பாளர்கள். மண்டல, கிளைப் பொறுப்பாளர்கள் என பலரும் இங்கு வந்திருக்கிறீர்கள். தேர்தல் கூட்டணைியைப் பற்றி நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொள்வார்கள்.