தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டத்துக்கு, விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். பிரதமர் மோடி, இந்த மாதம் கடைசியில் இலங்கை செல்ல இருக்கிறார். அப்போது அவர், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்துப் பேசவேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்துவோம்.