அகமதாபாத்: “பாஜகவுக்காக வேலை செய்யும் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளை முதலில் அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள்கள் பயணமாக குஜராத் சென்றுள்ள ராகுல் காந்தி, இரண்டாவது நாளான இன்று அகமதாபாத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினர். அப்போது பேசிய அவர், "குஜராத் காங்கிரஸில் இரண்டு விதமான தலைவர்களும், நிர்வாகிகளும் உள்ளனர். ஒரு பிரிவினர் மக்களுக்கு நேர்மையாக இருப்பவர்கள், அவர்களுக்காக போராடுபவர்கள், அவர்களை மதிக்கிறவர்கள், காங்கிரஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்திருப்பவர்கள். மற்றொரு வகையினர், மக்களை மதிக்காமல், அவர்களிடமிருந்து விலகி இருப்பவர்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுக்காக வேலை செய்பவர்கள். அவர்கள் களையப்பட வேண்டும்.